சீரியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 39 மலேசியர் நாடு திரும்ப விருப்பம்

சீரியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 65 மலேசியரில் 39 பேர் போலீசைத் தொடர்புகொண்டு நாடு திரும்ப விரும்புவதாகக் கூறியுள்ளனர். அவர்களில் பத்து ஆடவர்கள் வயது வந்தவர்கள், 12பேர் சிறுவர்கள், அறுவர் பெண்கள் என்று புக்கிட் அமான் பயங்கரவாத- எதிர்ப்புப் பிரிவு தலைமை உதவி இயக்குனர் ஆயோப்…

‘மே18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை’ , ஜொகூர்பாரு மாநகரில் 10-ஆம்…

கடந்த 2009, மே18-ம் நாள் இலங்கை அரசு நடத்திய முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் தங்கள் இன்னுயிரை ஈந்த அப்பாவி பொதுமக்களை நினைவு கோரும் நிகழ்ச்சி, நேற்றிரவு ஜொகூர் பாரு மாநகரில் நடந்தேறியது. ஜொகூர் செம்பருத்தி தோழர்கள் ஏற்பாட்டில், தொடர்ந்து 10-ம் ஆண்டாக நடந்த இந்த ‘மெழுகுவர்த்தி ஏந்தல் நினைவஞ்சலி’ நிகழ்ச்சியில்…

பெர்லிஸ் முப்தியின் காருக்குத் தீ வைத்தவன் கைது

மார்ச் 22-இல் பெர்லிஸ் முப்தி முகம்மட் அஸ்ரி சைனுல் அபிடின் காருக்குத் தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் நபரைப் போலீஸ் கைது செய்துள்ளது. வேலையில்லாத அந்நபர் சனிக்கிழமை இரவு மணி 2.45க்கு ஆராவ், கம்போங் ஜெலம்போக்கில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார் என பெர்லிஸ் போலீஸ் தலைவர் நூர்…

பகாங்: எண்ணெய் உரிமப் பணத்தை புத்ரா ஜெயா பரிசீலனை செய்ய…

பகாங் அரசு அம்மாநிலத்துக்கு எண்ணெய் உரிமப் பணம்   அல்லது     “வாங்  இசான்(கருணை  நிதி) கொடுப்பது பற்றி புத்ரா ஜெயா பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. அதன் தொடர்பில் விரைவில் ஒரு கடிதம் அனுப்பப்படும்  என்றும்  எவ்வளவு கொடுப்பது என்பதைக் கூட்டரசு அரசாங்கத்தின் முடிவுக்கே விட்டு விடுவதாகவும்…

பாங்கி கோயில் சாலையை எம்பிகேஜே தலையிட்டுத் திறந்து வைத்தது

ஒரு மேம்பாட்டாளரும் பாங்கி தோட்டத்து முன்னாள் ஊழியர்களும் சர்ச்சையிட்டுக் கொண்டிருக்கும் லாடாங் பாங்கி ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயத்துச் செல்லும் சாலையை காஜாங் முனிசிபல் மன்றம்(எம்பிகேஜே) தலையிட்டுத் திறந்து வைத்துள்ளது. ஆலயத்துக்குச் செல்லும் சாலையை மூடி கேட்டுக்குப் பூட்டும் போட்டு வைத்திருந்தார் மேம்பாட்டாளர். எம்பிகேஜே அதிகாரிகளும் மாவட்ட போலீசும் நேற்று மாலை…

அருண் காசி அடுத்த வாரம் விடுதலை

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக 30-நாள் சிறையிடப்பட்ட வழக்குரைஞர் அருண்(அருணாசலம்) காசி செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரை வரவேற்க வழக்குரைஞர் குழு ஒன்று காஜாங் சிறைச்சாலைக்குச் செல்லும் என்று அவரின் வழக்குரைஞர் ஜோய் அப்புக்குட்டன் மலேசியாகினியிடம் தெரிவித்தார். “அருண் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்படுவார் என்று கூறும் காஜாங் சிறைச்சாலைத் துறை…

புதிய மலேசியா வரும் ஆனால், அது ஒரே நாளில் வந்துவிடாது-…

மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்துதான் புதிய மலேசியாவை உருவாக்க வேண்டும். அதை உருவாக்க நாளாகும், அதை ஒரே நாளில் உருவாக்கிவிட முடியாது என்று துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் கூறினார். “மலேசியா பாரு என்றால் நாம் அனைவரும் ஒன்றுசேர வேண்டும் என்பதாகும். மலேசியர் ஒவ்வொருவரும் ஒத்துழைத்து…

கடன் வாங்கியவர்களைக் கருப்புப் பட்டியலிட்டால் பிடிபிடிஎன் மக்களின் கோபத்துக்கு ஆளாக…

உயர்க் கல்விக் கடனுதவிக் கழகம் (பிடிபிடிஎன்), கடனைத் திருப்பிக் கொடுக்காதவர்களைக் கருப்புப் பட்டியலில் சேர்க்க நினைத்தால் அது மக்களின் கோபத்துக்கு உள்ளாகும் என மாணவப் போராட்டவாதி அஷீக் ச்லி சேதி அலிவி எச்சரித்துள்ளார். “அப்படிப்பட்ட ஆலோசனையே பிடிபிடிஎன், பணம் பிடுங்கும் முதலையோ என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. “பிடிபிடின் அந்த…

மலேசியர்களுக்கு எதிரான மரணத் தண்டனையை நிறுத்துங்கள், வழக்குரைஞர் சிங்கப்பூரிடம் வலியுறுத்து

எதிர்வரும் வெள்ளிக்கிழமை, சிங்கப்பூரில் தூக்கிலிடப்படவுள்ள மலேசியரின் தண்டனையை நிறுத்தும்படி, சுதந்திரத்திற்கான வழக்குரைஞர் குழு (லோயர்ஸ் ஃபோர் லிபர்ட்டி) சிங்கப்பூரைக் கேட்டுக்கொண்டுள்ளது. அதேசமயம், தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் பி பன்னீர்செல்வத்தின், 32, தூக்குத் தண்டனையைச் சிறைவாசமாக மாற்ற வேண்டும் என்று மலேசிய அரசு சிங்கப்பூரை வலியுறுத்த வேண்டும் என்றும் அக்குழுவின்…

பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்எம் முகமட் இட்ரிஸ் காலமானார்

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மற்றும் மலேசியச் சுற்றுச்சூழல் நண்பர்கள் (சஹாபாட் ஆலாம் மலேசியா) இயக்கத்தின் தலைவருமான எஸ்எம் முகமட் இட்ரிஸ், மாரடைப்பு காரணமாக இன்று இயற்கை எய்தினார். அன்னாருக்கு 93 வயது. முன்னதாக, மூச்சுத் திணறல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று மாலை மணி 4.45 அளவில்,…

பிடிபிடிஎன் கடனைச் செலுத்தாதவர்களுக்குப் பயணத் தடையை மீண்டும் கொண்டுவர ஆலோசிக்கப்படுகிறது

உயர்க்கல்விக் கடன் நிதிக்கழகம் பிடிபிடிஎன், கடனைச் செலுத்தாதவர்களுக்கு முன்னர் செய்ததுபோல் பயணத் தடை விதிக்கலாமா என்று ஆலோசிக்கிறது. கல்விக் கடனைத் திரும்பப் பெறப் பல்வேறு வழிகள் ஆராயப்படுவதாக ஊடகங்களுக்காக நடத்தப்பட்ட ஒரு விளக்கமளிப்புக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. பிடிபிடிஎன் அமைச்சரவையிடம் பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது என்றும், அவற்றுள் கடன் செலுத்தாதவர்கள்…

அரசாங்க ஊழியர்களுக்கு ராயா போனஸ் உண்டு- மகாதிர்

அரசாங்கம் அதன் பணியாளர்களுக்கு அய்டில்பித்ரி போனஸ் கண்டிப்பாக வழங்கும் எனப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறியுள்ளார். ஆனால், எவ்வளவு கொடுக்கப்படும், எல்லாருக்குமே கொடுக்கப்படுமா என்பனவற்றை அவர் தெரிவிக்கவில்லை. அது பின்னர் அறிவிக்கப்படும் என்றார். “அரசாங்கப் பணியாளர்களுக்க்கு அய்டில்பித்ரி போனஸ் உண்டு. அதைப் பற்றிப் பின்னர் அறிவிக்கப்படும்”, என்றவர்…

ஐஎஸ்-தொடர்புக் கும்பல் ஆடிப் பெயரைத் தவறாக பயன்படுத்தி க் கொண்டிருக்கிறது…

மாதத் தொடக்கத்தில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்-தொடர்புடைய கும்பல், அதன் பயங்கரவாதச் செயல்களை நியாயப்படுத்த காலஞ்சென்ற தீயணைப்புப் படை வீரர் முகம்மட் ஆடிப் முகம்மட் காசிமின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அடிப்பின் குடும்பத்தினருக்கும் ஆடிப்பின் மரணத்துப் பழிவாங்கத்தான் மலாய்க்காரர்-அல்லாதாரின் வழிபாட்டுத் தளங்களைத் தாக்கத் திட்டமிட்டதாக ஐஎஸ்-தொடர்புடைய கும்பல் கூறிக்கொள்வதற்கும் தொடர்பில்லை.…

திடீர் தேர்தல் வரலாம் : தெங்கு ரசாலி எச்சரிக்கை

அம்னோ ஆலோசனை மன்றத் தலைவர் தெங்கு ரசாலி ஹம்சா, திடீர் பொதுத் தேர்தல் வரும் சாத்தியம் இருப்பதால் அம்னோ அதற்குத் தயாராக வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். தேர்தலுக்குத் தயாராவது என்றால் பாஸுடனும் மற்ற பிஎன் உறுப்புக் கட்சிகளுடனும் இட ஒதுக்கீடுமீது பேச்சு நடத்துவதும் அதில் அடங்கும் என்று…

மலேசியத் தொழிலாளர்களை ஜப்பானுக்கு அனுப்புவதற்கான ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை

மலேசியா ஜப்பானுடன் செய்துகொள்ளவுள்ள ஒத்துழைப்புக் குறிப்பாணை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் கூறினார். அந்தக் குறிப்பாணை மலேசியா அதன் தொழிலாளர்களை ஜப்பானுக்கு அனுப்ப வகை செய்யும். “ஜப்பானுடனான எம்ஓசி வரையப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் இறுதி செய்யப்படவில்லை”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார். மலேசியர்களுக்கு வெளிநாட்டில்…

அன்வாரைத் தற்காக்கிறார் அஸ்மின்

அன்வார் இப்ராகிம் ஒரு முன்னாள் கைதி என்பதால் அவர் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர்தானா என்று பாஸ் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான் கேள்வி எழுப்பியது பொறுப்பற்றதனம் என்று பிகேஆர் துணைத் தலைவர் முகம்மட் அஸ்மின் அலி கூறினார். பிகேஆர் தலைவர் அரச மன்னிப்பு பெற்றார் என்பதையும் மறந்து டஹ்கியுடின்…

‘விடுப்பு எடுத்துக்கொண்டு தேர்தல் பரப்புரை செய்யுங்கள்: அமைச்சர்களுக்கு பெர்சே அறிவுறுத்து

அமைச்சர்களும் கட்சித் தலைவர்களாக உள்ள அரசுப் பணியாளர்களும் வேலை நேரத்தில் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட விரும்பினால் விடுப்பு எடுத்துக்கொண்டு அதைச் செய்யலாம் என பெர்சே பரிந்துரைத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் தேர்தல் பரப்புரைக் கட்டுப்பாடுகள் அமைச்சர்கள் வேலை நேரத்தில் பரப்புரை செய்வதைத் தடுப்பதாக பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் குறைப்பட்டுக்…

ஜாஹிட், ஹிஷாம், இஸ்மாயில் ஆகியோரின் ஜிஇ 14 வெற்றிமீது விசாரணை…

டிஏபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங், நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு இராணுவ வாக்காளர்கள் மாற்றிவிடப்பட்டது சட்டவிரோதமான செயல் என்று கூறப்படுவதையும் அதனால் அத்தொகுதிகளின் முடிவுகளைச் செல்லாது என்று அறிவிக்கலாமா என்பதையும் தேர்தல் ஆணையம்(இசி) ஆராய வேண்டும் என்று விரும்புகிறார். பிஎன் அமைச்சர்களான அஹ்மட் ஜாஹிட் ஹமிடி(பாகான் டத்தோ),…

நிலம் மாற்றிவிடப்பட்டதில் ஊழல் : தற்காப்பு அமைச்சு எம்ஏசிசி-இடம் புகார்

தற்காப்பு அமைச்சு அதன் நிலங்கள் மாற்றிவிடப்பட்டதில் ஊழல்கள் நிகழ்திருப்பதாக மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம் ஏசிசி)த்திடம் இரண்டு புகார்களைச் செய்துள்ளது. 16 இடங்களில் நிலம் மாற்றிவிடப்பட்டதில் ஊழல் நிகழ்ந்திருப்பது அம்பலப்படுத்தப்பட்டிருப்பதால் அவ்விவகாரம் தொடர்பில் விரிவாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அது ஓர் அறிக்கையில் வலியுறுத்தியது. தற்காப்பு அமைச்சர்…

கடப்பிதழைத் திரும்பப் பெறும் ஜாஹிட்டின் முயற்சி தோல்வி

பண முறைகேடு, நம்பிக்கை மோசடி, ஊழல் குற்றங்கள் என 47 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் முன்னாள் துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடி பறிமுதல் செய்யப்பட்ட அவருடைய கடப்பிதழைத் திரும்பப் பெறும் முயற்சியில் தோல்வியுற்றார். மெக்கா சென்று உம்ரா செய்வதற்காக அந்தக் கடப்பிதழ் அவருக்குத் தேவைப்பட்டது. அவரது முறையீட்டைச் செவிமடுத்த…

ஜோகூர் அரசுப் பணியாளர்களுக்குப் பெருநாள் சிறப்பு உதவி

ஜோகூர் மாநில அரசுப்பணியாளர்கள் மாநில அரசிடமிருந்து நோன்புப் பெருநாள் சிறப்பு நிதி உதவி பெறுவார்கள் என்று மந்திரி புசார் டாக்டர் ஸாருடின் ஜமால் இன்று அறிவித்தார். உதவி தொடர்பான மற்ற விவரங்களை மாநிலச் செயலாளர் அஸ்மி ரொஹானி அறிவிப்பார் என்றவர் சொன்னார். அந்த உதவி அய்டிபிட்ரி-க்கு முன்பு கொடுக்கப்படும்…

பாஸ் கட்சியினர் கட்சி விவகாரங்களை பகிரங்கமாக விவாதிக்கத் தடை

பாஸ்  அதன் உறுப்பினர்கள் கட்சி விவகாரங்களை வெளிப்படையாக விவாதிக்கத் தடை விதித்துள்ளது. கட்சி தொடர்பான ஆலோசனைகளோ விமர்சனங்களோ கருத்துகளோ கட்சிக்குள்ளேயே வைத்துக்கொள்ளப்பட வேண்டும் என  பாஸ் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான்     இன்று ஓர் அறிக்கையில் கூறினார். “இதுதான் கட்சியின் கட்டொழுங்கு. கட்சி பேச்சுச் சுதந்திரத்தை அனுமதிக்கிறது…

மெட்ரிகுலேசனை அகற்றுவீர்: கெராக்கான் வலியுறுத்து

கெராக்கான் தலைவர் டொமினிக் லாவ், மெட்ரிகுலேசன் கல்வியை அகற்றிவிட்டு எஸ்டிபிஎம் தேர்வைப் பல்கலைக்கழக நுழைவுக்கான பொதுவான தகுதியாக வைக்க வேண்டும் என்று கூறுகிறார். எது சரியோ அதைச் செய்யும் அரசியல் துணிவு பக்கத்தான் ஹரப்பானுக்கு வேண்டும் என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார். “மாணவர்கள், எல்லாருமே மலேசியர்களே, அவர்கள் நியாமற்ற…