சிறுவர் பாதுகாப்பு விவகாரங்களைக் கவனிக்க தனி அமைப்பு

அரசாங்கம் சிறுவர் பாதுகாப்பு விவகாரங்களைக் கவனிக்க சிறுவருக்கான ஒரு அமைப்பை உருவாக்கத் திட்டமிடுகிறது என மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டுத் துணை அமைச்சர் ஹன்னா இயோ கூறினார். இப்போது சமுக நலத் துறையில் சிறுவர் நலத் துறை ஒன்று இருக்கிறது. ஆனால், அதற்கு அளவுக்கு அதிகமான பொறுப்புகள் உள்ளன…

நஜிப், ரோஸ்மாவுக்கு சிலாங்கூர் கொடுத்த டத்தோ ஸ்ரீ பட்டங்கள் தற்காலிகமாக…

சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா, முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவரின் மனைவி ரோஸ்மா மன்சூர் ஆகியோருக்கு வழங்கிய பட்டங்களை அவர்களின் நீதிமன்ற வழக்குகள் முடியும்வரை தற்காலிகமாக இரத்துச் செய்துள்ளார். மே 6 தொடங்கி அந்தத் தற்காலிக இரத்து அமலுக்கு வருவதாக சுல்தானின் செயலாளர்…

தீவுக்குச் செல்ல போலீஸ் படகைப் பயன்படுத்துவதா? வாரிசானைச் சாடியது பெர்சே

வாரிசான் கட்சி அதன் கட்சித் தொண்டர்களை ஒரு போலீஸ் படகில் பூலாவ் பெர்ஹாலாவுக்குக் கொண்டுசென்றதை பெர்சே கண்டித்துள்ளது. சாபா முதலமைச்சர் ஷாபி அப்டாலின் கட்சி உறுப்பினர்கள் தேர்தல் பரப்புரைக்காக சண்டாகானின் மேற்குக் கரைக்கு அப்பால் உள்ள தீவுக்குப் போலீஸ் படகு ஒன்றில் சென்றார்கள் என்றும் படகை ஒரு போலீஸ்…

அன்வாரைப் பிரதமராக்கும் வாக்குறுதியை நினைவுபடுத்துகிறார் பிகேஆர் தலைவர்

பிகேஆர் இளைஞர் உதவித் தலைவர் சைட் பாட்லி ஷா சைட் ஒஸ்மான், பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி அமைக்கப்பட்டபோது அன்வார் இப்ராகிம் பிரதமராக்கப்படுவார் என்று கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நினைவுபடுத்தினார். முதிர்ந்த வயதிலும் நாட்டை வழிநடத்தும் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கு நன்றி தெரிவித்த சைட் பாட்லி, அதிகாரத்தை மாற்றிக் கொடுக்கும் திட்டமொன்றும்…

அமைச்சரவைப் பட்டியல் அரசு இதழில் வெளியிடப்படாதது ஏன்? விளக்கமளிப்பீர் அல்லது…

பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் புத்ரா ஜெயாவில் ஆட்சி ஏற்று ஓராண்டு ஆகியும் அதன் அமைச்சர்களின் பட்டியல் இன்னமும் அரசிதழில் வெளியிடப்படாதிருப்பது ஏன் என்பதைத் தெரிந்துகொள்ள பாஸ் விரும்புகிறது. இதற்குத் தக்க பதில் அளிக்கவில்லை என்றால் அதற்கு அமைச்சரவை “முழுப் பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும்” என பாஸ்…

ஹரப்பான் சாதனைகளை ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் மதிப்பிடுங்கள் -ரபிடா கோரிக்கை

பக்கத்தான் ஹரப்பான் சாதனைகளை இப்போது மதிப்பிடக்கூடாது ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் மதிப்பிடுவதே முறையாகும் என்கிறார் முன்னாள் அமைச்சர் ரபிடா அசீஸ். “ஓராண்டு என்பது அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் 20 விழுக்காடுதான். “எனவே இப்போது மதிப்பீடு செய்வது அரசாங்கம் அதன் ஐந்தாண்டுப் பதவிக் காலத்தில் என்ன சாதித்தது என்பதைக் காண்பிக்கப் போவதில்லை”, என்றவர்…

இனவாதம் புதிய மலேசியாவைத் தடம்புரள வைத்து விடும் அன்வார் எச்சரிக்கை

  பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், இனவாதத்தை அடக்கி வைக்காவிட்டால் அது அரசாங்கத்தின் சீரமைப்புப் பணிகளைக் குலைத்துவிடும் என எச்சரிக்கிறார். “ஹரப்பான் மாற்றங்களையும் சீரமைப்புகளையும் கொண்டுவர முனைந்தாலும் இனத் தொடர்பு விவகாரங்கள் மோசமடைந்து வருவதுபோல் தெரிகிறது”, என்று அன்வார் இன்று ஓர் அறிக்கையில் கூறினார். “இன, சமூக மருட்டல்களைச்…

பட்டத்திளவரசரையும் குடும்பத்தையும் இப்படியா அவமதிப்பது? வேண்டாமே ‘சாக்கடை அரசியல்’ –…

ஜோகூர் பட்டத்திளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் ஒரு இளைஞர், பல்வேறு விவகாரங்களிலும் தன் கருத்தை வெளியிட விரும்புகிறவர் என முன்னாள் சட்ட அமைச்சர் சைட் இப்ராகிம் கூறினார். இளவரசரின் கருத்துகள் சில தவறானவையாக இருக்கலாம், ஏறுமாறானவையாகக் கூட இருக்கலாம், ஆனால் அவற்றால் நாட்டுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை…

ரமலான் மாதத்தில் உணவகங்களை இரவில் தற்காலிகமாக மூட மாநில அரசு…

கிளந்தானில் உள்ள உணவகங்கள் நோன்பு மாதத்தில் இரவு மணி 8.30-இலிருந்து 10மணிவரை தற்காலிகமாக மூடப்பட வேண்டும். மாநில அரசு, மாநிலச் செயலகம் வழி அதற்கான உத்தரவைப் பிறப்பித்திருந்தது. ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் தராவி தொழுகை செய்வதை ஊக்குவிக்கவே அவ்வாறு செய்யப்படுவதாக அரசின் அறிக்கை கூறியது. அப்படி ஒரு உத்தரவு…

அரசுப் பணியாளர்களை அரசாங்கம் நம்ப வேண்டும்-டயிம்

சில அரசாங்கப் பணியாளர்கள் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்துக்குக் குழிபறிக்க முனைவதாக பிரதமர் கூறியிருந்தாலும் அவரின் அணுக்கமான ஆலோசகர் ஒருவர் அரசாங்கம் அரசியலில் நீடித்திருக்க விரும்பினால் அது அரசுப் பணியாளர்களை நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறார். டயிம் சைனுடின், ஹாங்காங்கின் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் நாளிதழுக்கு அளித்த நேர்காணலில்…

ஜோகூர் பட்டத்திளவரசர் சிறு பிள்ளை, பேசுவதை நிறுத்த வேண்டும்- மகாதிர்

ஜோகூர் பட்டத்திளவரசர்(டிஎம்ஜே) துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் அவருக்குத் தெரியாத விசயங்கள் குறித்துப் பேசக் கூடாது என டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். பிரதமர், ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டார் குறித்துக் கருத்துரைப்பதைத் தவிர்த்தார் ஆனால், பட்டத்திளவரசர் பற்றிக் கருத்துரைப்பதில் அவருக்கு எந்தத் தயக்கமுமில்லை. “சுல்தான்…

‘காபிர்கள்’ நாட்டை ஆண்டால் உய்குர்களுக்கு ஏற்பட்ட நிலைதான் இங்குள்ள முஸ்லிம்களுக்கும்

இந்நாட்டை முஸ்லிம்-அல்லாதார் ஆள அனுமதித்தால் சீனாவில் உய்குர் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நிலைதான் இங்குள்ள முஸ்லிம்களுக்கும் ஏற்படும் என்று பாஸ் மத்திய செயல்குழு உறுப்பினர் மொக்தார் செனிக் எச்சரித்துள்ளார். “எனக்குச் சீனாவில் உள்ள சக முஸ்லிம்கள்தான் நினைவுக்கு வருகிறார்கள். அவர்கள் நோன்பிருக்கவும் சமயத்தைப் பின்பற்றவும் தடை செய்யப்பட்டிருக்கிறது. மலேசிய முஸ்லிம்கள்…

‘முன்பு மசீச செய்ததைத்தானே இப்போது நீங்களும் செய்கிறீர்கள்’- கிட் சியாங்கைச்…

கடந்த ஆண்டு மசீச அதன் ஆண்டுக் கூட்டத்தை இரகசியமாக நடத்தியபோது லிம் கிட் சியாங் அதைச் சிறுமைப்படுத்திப் பேசியதை வீ கா சியோங் இன்று நினைவு கூர்ந்தார். 1எம்டிபி ஊழலில் முன்னாள் பிரதமரைத் தற்காத்துப் பேசிய கட்சித் தலைமையை உறுப்பினர்கள் ஆண்டுக் கூட்டத்தில் பிய்த்தெடுத்து விடுவார்கள் என்று அஞ்சியே…

ஹருஸ்சானி : பிஎச் அரசாங்கத்தின் கீழ், இஸ்லாம் மதம் அழுத்தப்படுவதாக…

நாட்டில், தற்போது இஸ்லாத்தின் நிலை மோசமாக உள்ளது எனும் பெர்லிஸ் முஃப்தியின் கருத்தோடு, பேராக் முஃப்தி ஹருஸ்சானி ஜக்காரியா ஒத்துபோகவில்லை. [caption id="attachment_175209" align="alignright" width="350"] அஸ்ரி[/caption] அரசாங்கம் மாறினாலும், மலேசியாவில் இஸ்லாம் மதத்தின் நிலை பாதுகாப்பாகவே உள்ளது என்றார் அவர். “புதிய அரசாங்கத்தின் கீழ், இஸ்லாம் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக எனக்குத்…

ஆர்டிஎஸ் திட்டத்துக்குத் தேவையான நிலத்தை இலவசமாகவே கொடுக்க முன்வந்தார் ஜோகூர்…

ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இஸ்கண்டார், புக்கிட் சாகாரில் தமக்குச் சொந்தமான நிலமொன்று உத்தேச ஜோகூர் பாரு-சிங்கப்பூர் விரைவு இரயில் திட்டத்துக்குத் (ஆர்சிஎஸ்) தேவைப்படுவது தமக்குத் தெரியாது என்றார். அந்த நிலத்துக்கு இழப்பீடு கொடுக்க வேண்டியிருப்பதால் ஆர்டிஎஸ் திட்டச் செலவு உயர்ந்து விட்டதாகக் கூறப்படுவதைக் கேட்டு சுல்தான் வருத்தமடைந்ததாகவும் நிலத்தை…

இந்து சமயத்தை அவமதித்தேனா? மறுக்கிறார் முகம்மட் ஜம்ரி

இந்து சமயத்தை அவமதித்ததற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட முகம்மட் ஜம்ரி வினோத் காளிமுத்து அப்படிப்பட்ட குற்றமெதனையும் தான் செய்யவில்லை என மறுக்கிறார். “நான் அவமதித்ததாக பலரும் குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால், அவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளவில்லை. யாரெல்லாம் என்னைக் குற்றம் சாட்டுகிறார்களோ அவர்கள்தான் உண்மையில் அவமதிக்கிறார்கள். “பொறுப்பற்ற கும்பல்களான இஸ்லாத்தின்…

இன்று வரலாற்றில் குறிப்பிட வேண்டிய நாளாகத் தமிழ்க்காப்பக அமைப்புநாள் அமைந்தது

இன்று வரலாற்றில் குறிப்பிட வேண்டிய நாளாகத் தமிழ்க்காப்பக அமைப்புநாள் அமைந்தது. மலேசியக் கல்வி அமைச்சின் அரசுப்படியான ஒப்புதலோடு முகாமையான அரசு அதிகாரிகளின் துணையோடும் அரசுசாரா அமைப்புகளின் துணையோடும் தமிழ்க் காப்பகம் அமைந்தது. இவ்வமைப்பு விழாவை மலேசியக் கல்வி அமைச்சின் துணையமைச்சர் மாண்புமிகு தியோ நீ சின் அதிகாரப்படியாகத் தொடக்கி…

ஜாகீர் நாய்க்மீது பணச் சலவை குற்றச்சாட்டு

சர்ச்சைக்குரிய சமய விரிவுரையாளர் ஜாகீர் நாய்க்மீது இந்தியாவில் பணச் சலவைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பதாக பிபிசி அறிவித்துள்ளது. (கருப்புப்  பணத்தை  வெள்ளைப்  பணமாக  மாற்றுவதே  பணச்  சலவையாகும்). அவர் யுஎஸ்$ 28 மில்லியனை(ரிம116 மில்லியன்)ச் சட்டவிரோதமான முறையில் பெற்றாராம். அத்துடன் அவர் வெறுப்பூட்டும் பேச்சுகளைப் பேசி வந்ததாகவும் பயங்கரவாதத்தைத் தூண்டி…

பணி ஓய்வு பெறும் பூஸி பொறுப்புகளை ஹமிட்டிடம் ஒப்படைத்தார்

இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் பணியிலிருந்து ஓய்வுபெறும் முகம்மட் பூஸி ஹருன், தேசிய போலீஸ் படைத் தலைவர் பொறுப்புகளை அப்துல் ஹமிட் படோரிடம் இன்று ஒப்படைத்தார். உள்துறை அமைச்சர் முகைதின் யாசின் முன்னிலையில் பொறுப்புகளை- ஒப்படைக்கும் நிகழ்வு நடந்தது. போலீஸ் சிறப்பு படை முன்னாள் இயக்குனரான அப்துல் ஹமிட் இரண்டாண்டு…

நஜிப் செய்த தவற்றையே குவான் எங்கும் செய்துள்ளார்-பெர்சே சாடல்

சண்டாகான் இடைத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் வெற்றி பெற்றால் அங்கு கார் நிறுத்தும் இடப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என்று கூறிய நிதி அமைச்சர் லிம் குவான் எங்கைத் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெர்சே சாடியது. முன்னாள் பிரதமர் நஜிப்பும் இப்படித்தான் தேர்தல் வாக்குறுதிகள் கொடுப்பதை வழக்கமாக…

ஜாஹிட்டின் கடப்பிதழைத் திருப்பிக் கொடுக்க நீதிமன்றம் மறுப்பு

உம்ராவை நிறைவேற்றுவதற்காக நீதிமன்றத்திடமுள்ள தன் கடப்பிதழ் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என்று முன்னாள் துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் மனுச் செய்திருந்தார். ஆனால் , முஸ்லிம்களுக்கு உம்ரா கட்டாயக் கடமையல்ல என்பதால் கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் அவரது மனுவைத் தள்ளுபடி செய்தது. ஜாஹிட் பல குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குவதால் கடப்பிதழைக்…

அமெரிக்கா செல்லும் மலேசியருக்கு விசா தேவையில்லை எனபது தப்பான செய்தி-விஸ்மா…

அமெரிக்காவால் விசா விலக்களிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் மலேசியாவும் இடம்பெற்றிருப்பதாக இணைய செய்தித்தளமொன்றில் வெளிவந்த செய்தி தவறு என வெளியுறவு அமைச்சு கூறியது. “அமெரிக்கா செல்லும் மலேசியர்கள் வழக்கம்போல் விசா எடுத்துக்கொண்டுதான் செல்ல வேண்டும்”, என அமைச்சு ஓர் அறிக்கையில் கூறியது. அதில் எந்த மாற்றமுமில்லை. எனவே, வாட்ஸ் எப்பிலும்…

இரண்டாண்டு ஒப்பந்தத்தில் ஹமிட் படோர் புதிய ஐஜிபியாக நியமனம்

அப்துல் ஹமிட் படோர் இரண்டாண்டுக்கால ஒப்பந்தத்தில் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீசாக நியமிக்கப்பட்டார். அவருடைய பணிக்காலம் சனிக்கிழமை  தொடங்குகிறது. அவரது நியமனத்துக்குப் பிரதமரின் ஆலோசனையின்பேரில் மாமன்னர் ஒப்புதல் தெரிவித்திருப்பதாக உள்துறை அமைச்சர் முகைதின் யாசின் ஓர் அறிக்கையில் கூறினார். அவரது ஒப்பந்தம் 2021, மே 3-இல் முடிவுக்கு வரும். ஹமிட்…