13ம் திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி

courts_00113ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலேயே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

13ம் திருத்தச் சட்டம் சட்டவிரோதமானது எனத் தெரிவித்த நீர்கொழும்பைச் சேர்ந்த பத்மபிரிய சிறிவர்தன என்பவரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

உரிய காலத்திற்கு பின்னர் சட்ட நியதிகளை கருத்திற் கொள்ளாது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் மனுதாரருக்கு எதிரான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையிலான நீதியரசர் குழாம் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

TAGS: