பதவிப்பிரமாணம், அமைச்சரவை தொடர்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் முடிவின்றி முடிந்தது!

tnaவடக்கு மாகாண முதலமைச்சரின் பதவிப் பிரமாணம் மற்றும் வடமாகாண அமைச்சரவையின் நியமனம் குறித்த தீர்மானத்துக்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேற்று கொழும்பில் கூடிய போதும் முடிவுகள் எதுவும் எடுக்கப்படாமல் முடிவடைந்தது.

இந்தநிலையில் நாளை 4ம் திகதி காலை மீண்டும் கூடி ஆராய்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் பதவிப்பிரமாணத்தை எங்கே யாரின் முன்னால் மேற்கொள்வது என்பது குறித்து நேற்று மாலை கூடிய கூட்டமைப்பு தலைவர்கள் விரிவாக கலந்துரையாடினார்கள்.

எனினும் அதில் முடிவுகள் எதனையும் காணமுடியவில்லை.

இதனையடுத்து அமைச்சரவை குறித்து ஆராயப்பட்ட போது கூட்டமைப்பில் உள்ள நான்கு கட்சிகளுக்கும் அதில் அங்கத்துவம் தருவது என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில் அமைச்சரவைக்கான நான்கு கட்சிகளும் தமது விண்ணப்பங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்துக்கு அனுப்பிவைப்பது எனவும், இதன் பின்னர் பரிசீலனை மேற்கொண்டு அமைச்சரவையை அமைப்பது என்றும் தீர்மானம் நேற்று எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS: