மாகாண சபை அதிகாரம் தொடர்பில் இந்தியாவின் உதவியுடன் வெளிநாடுகளுக்கு தெளிவுபடுத்த கூட்டமைப்பு திட்டம்

13vathi thiruththamவட மாகாண சபைக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் உட்பட 13வது திருத்தச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சகல அதிகாரங்களையும் அப்படியே வழங்க வேண்டும் என இந்தியா, இலங்கை அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், மாகாண சபைக்கான இந்த அதிகாரங்களை பெறுவதற்கான யோசனை ஒன்றை இந்திய அரசின் உதவியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் முன்வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் வடக்கு மாகாணத்திற்கு அதிகாரங்களை பெற்றெடுக்க இந்தியாவின் உதவியுடன் வெளிநாடுகளுக்கு தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்றையும் கூட்டமைப்பு முன்னெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

TAGS: