கிளிநொச்சியில் பௌத்த தூபியை திறந்து வைத்தார் கோத்தபாய!

mankulam_viharai_001தமிழர் பகுதிகளில் பௌத்த மேலாதிக்கத்தின் மற்றுமொரு குறியீடாக கிளிநொச்சியில் பெளத்த தூபி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க ஆகியோரால் இத்தூபி திறந்து வைக்கப்பட்டது.

மாங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள இத்தூபி, கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தில் முழு ஆதரவோடு நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இங்கு நீண்டகாமாக புத்த வழிபாடு நடைபெற்றமைக்கு வரலாறுகள் உள்ளதாகவும், முப்பது ஆண்டுகால யுத்தத்தினால் அவை சிதைவடைந்து விட்டதாக ஹிங்குராகந்தே சுமன தேரர் இந்நிகழ்வின்போது தெரிவித்துள்ளார்.

TAGS: