இந்திய மீனவர்களின் அத்துமீறல்: யாழில் உடனடியான கூட்டத்துக்கு ஜனாதிபதி அழைப்பு

Srilanka-president Rajapakseஇலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறுவதை தடுக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் அவசரக்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடமே ஜனாதிபதி இந்த பணிப்புரையினை விடுத்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமக்கு கீழ் வரும் அமைச்சுக்களின் பொறுப்புக்களுக்காக ஜனாதிபதியின் முன்னால் பதவிப் பிரமாணம் செய்து கொண்டபின்னரே ஜனாதிபதி அமைச்சர் ராஜிதவிடம் உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனையும் ஜனாதிபதி கேட்டுள்ளார்.

எனினும் இன்னும் இந்தக்கூட்டத்துக்கான திகதி குறிக்கப்படவில்லை எனவும் கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், வடக்கு மாகாண கடலோரக் கிராமங்களின் கிராம அதிகாரிகளையும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அழைக்கப்படுவர் என அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

TAGS: