துப்பாக்கிகளைத் தொலைத்த 24 போலீசார்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது

1 firearm1தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் கவனப்படுத்தப்பட்டுள்ள போலீசுக்குச் சொந்தமான துப்பாக்கிகள் காணாமல் போன விவகாரம் தொடர்பில் 24 போலீஸ் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு கூறியுள்ளது.

1 firearmகாணாமல்போன 44 துப்பாக்கிகளில் மீதமுள்ள 20 துப்பாக்கிகள் என்னவாகின என்று ஆராயப்பட்டு வருகிறது என உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி வான் ஜப்பார் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

துப்பாக்கிகள் காணாமல் போனதற்குக் கவனக் குறைவுதான் காரணம் என்று ஒட்டுமொத்தமாகக் கூறவியலாது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

“சில நேரங்களில், அதிகாரி ஆற்றுக்கு அருகில் குற்றவாளியுடன் போராடும் நிலை ஏற்பட்டு அப்போது துப்பாக்கி ஆற்றில் விழுந்திருக்கலாம். எனவே, வெவ்வேறு காரணங்கள் உண்டு”, என்றாரவர்.