புலிகளை தடை செய்யுமாறு நோர்வேயிடம், இலங்கை கோரிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்யுமாறு நோர்வே அரசாங்கத்திடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

விடுதலைப் புலிகளை மீண்டும் தடை செய்வது குறித்து நோர்வே அரசாங்கம் மீண்டும் கவனம் செலுத்த வேண்டுமென இலங்கை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜொஹான் கார் ஸ்ட்ரோ மற்றும் நோர்வே அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோருடன் நடைபெற்ற சந்திப்பின் போது இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது நோர்வேக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் நிமால் சிறிபால டி சில்லா அந்நாட்டு முக்கிய அரசியல்வாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அமைச்சர் நிமால் சிறிபாலவுடன், அமைச்சர் அனுர பிரியதர்சன யாபாவும் இணைந்து கொண்டுள்ளார்.

நல்லிணக்க நடவடிக்கைகளின் போது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடாது என அமைச்சர் நிமால் சிறிபால கோரிக்கை விடுத்துள்ளார்.

நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

TAGS: