என்எப்சி அறிக்கை இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிடப்படலாம்

1 nfcசர்ச்சைக்குரிய தேசிய ஃபீட்லோட் கார்ப்பரேசன் (என்எப்சி) மீதான பொதுக் கணக்குக் குழு(பிஏசி)-வின் அறிக்கை இன்னும் இரண்டு வாரங்களில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுவதாக  நடப்பு பிஏசி தலைவர்  நூர் ஜஸ்லான் தெரிவித்தார்.

முந்தைய பிஏசி தயாரித்த அறிக்கை அது என்று கூறிய நூர் ஜஸ்லான்,  புதிய குழு அந்த அறிக்கையை உறுதிசெய்யும் பணியில் ஈடுபட்டிருப்பதாக சொன்னார்.

“இன்னும் இரண்டு வாரங்களில் அதை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வோம்”, என்றாரவர்.

புதிய குழு, என்எப்சி அறிக்கையை அங்கீகரித்து அதை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யுமானால் பல “சுவையான விவரங்கள்” வெளிவரும் என பிஏசி உறுப்பினர்களில் ஒருவரான டோனி புவா ஏற்கனவே கூறியுள்ளார்.