முக்ரிஸ்: சீனர்கள், பிஎன்னை ஆதரிப்பதை நிரூபிக்க வேண்டும்

mukrizசுங்கை லிமாவ் இடைத் தேர்தல், சீனர்கள் பின்னை ஆதரிப்பதை நிரூபித்துக்காட்ட நல்ல வாய்ப்பு என்று கூறினார் கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர்.

இடைத் தேர்தலில் சீனர்கள் முக்கிய பங்காற்ற முடியும்  என்றாரவர்.

அத்தொகுதியில் சுமார் 1,800 சீன வாக்காளர்கள் உள்ளனர்.

“சீனர்களில் பாதிப்பேர் வாக்களித்தால் போதும் அத்தொகுதியை நாம் கைப்பற்ற முடியும்”, என்று கம்போங் சுங்கை லிமாவ் டாலாமில் முக்ரிஸ் கூறினார்.

அவர் சீனப் பள்ளிகளுக்கு உதவி நிதியுதவி அளிக்க மறுத்தார் என்று சொல்லப்படுவது பற்றி வினவியதற்கு, “யாருக்கு உதவி அளிக்க வேண்டும் என்பதை எவரும் எனக்குச் சொல்லித் தர வேண்டிய அவசியமில்லை”, என்றார்.