டிஏபி-யைக் கடுமையாக விமர்சித்து வந்த சுல்கிப்ளி கட்சியின் எல்லாப் பதவிகளிலிருந்தும் விலகினார்

zulமுன்னாள் டிஏபி உதவித் தலைவரான சுல்கிப்ளி முகம்மட் நூர். அக்கட்சியின் எல்லாப் பதவிகளிலிருந்தும் இன்று விலகினார்.

பல மாதங்களாக அக்கட்சியைக் குறைகூறி வந்த சுல்கிப்ளி, பாயான் பாரு டிஏபி தொடர்புத் தலைவர், பினாங்கு டிஏபி செயற்குழு உறுப்பினர், பினாங்கு மாநில சுற்றுலா பிரிவுத் தலைவர் ஆகிய பதவிகளிலிருந்து விலகுவதாக இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

ஆனால், அவர் டிஏபி-இல்  ஒரு சாதாரண உறுப்பினராக தொடர்ந்து இருப்பார். 26 ஆண்டுகளாக அவர்  கட்சி உறுப்பினராக இருந்து வருகிறார்.