மாடுவெட்டிய விவகாரம் தொடர்பில் கமலநாதனைச் சாடியது பெர்காசா

kamalanatahanகல்வி அமைச்சு பள்ளிகளில் மாடுவெட்ட அனுமதித்ததில்லை என்று அறிக்கை வெளியிட்டதன்வழி கல்வி அமைச்சர் II பி.கமலநாதன் இஸ்லாத்தை அவமதித்து விட்டார் என பெர்காசா சாடியுள்ளது.

“பள்ளிகளில் குர்பான் செய்ய அனுமதி இல்லை என்று பி.கமலநாதன் அறிக்கை வெளியிட்டது மலாய்க்காரர்களையும் முஸ்லிம்களையும் அவமதிக்கும் செயலாகும்”, என பெர்காசா அமைப்பின் இளைஞர் தலைவர் இர்வான் பாஹ்மி இட்ரிஸ் தம்  வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“உங்கள் சமயச் சடங்குகள் குறித்து நாங்கள் கேள்வி கேட்டதே இல்லை……நீங்கள் பெரும்பான்மை இனத்தின் சமயத்தை மதிக்கவில்லை”, என்றாரவர்.