பரிசோதனைக்காக’ ஹெரால்ட் பறிமுதல் செய்யப்பட்டதாம்: அரசாங்கம் கூறுகிறது

herald‘கிறிஸ்துவ இதழான த ஹெரால்ட் பறிமுதல் செய்யப்பட்டதைத் தற்காத்துப் பேசியுள்ளது உள்துறை அமைச்சு.

அண்மையில் மேல்முறையீட்டு நீதிமன்றம் அந்த வார இதழ்  ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தக்கூடாது என்று தீர்ப்பளித்ததைச் சுட்டிக்காட்டிய அமைச்சு, அதில் அச்சொல் பயன்படுத்தப்படாதிருப்பதை உறுதிசெய்வதற்காகவே அவ்வாறு செய்யப்பட்டது என விளக்கமளித்தது.

“பரிசோதனையில் அதில் ‘அல்லாஹ்’ சொல் பயன்படுத்தப்படவில்லை என்பது தெரிய வந்ததால், அது  திருப்பிக் கொடுக்கப்பட்டது”, என அமைச்சு அதன் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.