யாழ்ப்பாணம் வரும் உலகத் தலைவர்களை ஏமாற்ற அரசாங்கம் நடத்திய நாடகம்

sajeevan_001மயிலிட்டியை முற்று முழுதாக ஆக்கிரமிக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. உலக நாடுகள் யாழ்ப்பாணத்திற்கு வரவுள்ள நிலையில் அவர்களை ஏமாற்றுவதற்காகவே அகதிகளை அவசரமாக வேறிடங்களில் குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் எஸ்.சஜீவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் பல்வேறு முகாம்களில் வலி.வடக்கு மக்கள் தங்கியுள்ளனர். இந்நிலையில் அவர்களை அங்கிருந்து தந்திரமாக வெளியேற்றும் செயற்றிட்டங்கள் நடைபெறுகின்றன.

இதன் ஒரு முயற்சியே பலாலி கிழக்கில் மக்களை குடியேற்றும் திட்டம். உலக நாட்டின் தலைவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து தமிழர்களின் உண்மை நிலையினை அறிந்து கொள்ளவுள்ள நிலையில் அரசு கபடத்தனமாக இந்த முயற்சியை மேற்கொள்கின்றது.

வலி.வடக்கு மக்களை அவர்கள்து சொந்த இடங்களிலேயே குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மக்கள் பேராட்டங்களுக்கு தயராகி வருகின்றனர்.

எனவே வலி.வடக்கு மக்களை ஏமாற்றும் இவ்வாறான முயற்சிகளை பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றார்.

TAGS: