ஷரிசாட் ரிம100 மில்லியன் அவதூறு வழக்கைக் கைவிட்டார்

1 caseபிகேஆரின் ரபிஸி ரம்லி, சுரைடா கமருடின் ஆகியோர்மீது தொடுத்திருந்த ரிம100 மில்லியன் அவதூறு வழக்கை ஷரிசாட் அப்துல் ஜலில் நிபந்தனையின்றி மீட்டுக்கொண்டிருக்கிறார்.

அம்னோ மகளிர் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஷரிசாட்,  அவருக்கும் அவரின் பிள்ளைகளுக்கும் சொந்தமான நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன் (என்எப்சி) தொடர்பில் அவ்விருவரும் தம் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசி வந்ததாகக் கூறி அவர்களுக்கு எதிராக வழக்கு தொடுத்திருந்தார்.

கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் அவ்வழக்கு இன்று மீட்டுக்கொள்ளப்பட்டது.

ஷரிசாட் வழக்கைக் கைவிட்டாலும் தாம் என்எப்சி மீதான விசாரணையை நிறுத்தப்போவதில்லை என ரபிஸி கூறினார்.