கோயிலில் மதுபானங்கள் இருந்ததாகச் சொல்வது அபத்தம்- ஆலய சட்ட ஆலோசகர்

manoஸ்ரீமுனீஸ்வரர் காளியம்மன் கோயிலின் சட்ட ஆலோசகர், கோயிலில் சட்ட விரோத நடவடிக்கைகள் நடப்பதாகவும் அங்கு மதுபானங்கள் இருந்ததாகவும் கூட்டரசு அமைச்சர் தெங்கு அட்னான் மன்சூர் கூறியிருப்பது ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டு என்றார்.

“யாரும் எதை வேண்டுமானாலும் கூறிக்கொள்ளலாம். நாங்கள் கோயில் நிர்வாகக் குழுவுடனும் தலைவருடனும் அணுக்கமாக இருந்து வந்திருக்கிறோம்.  அவர் ஒழுக்கச் சீலர்”, என எம். மனோகரன்.

கோயில் கட்டுமானத்துக்குப் பாதிப்பில்லை என்று மஇகா தலைவர் ஜி.பழனிவேல் கூறி இருப்பதும் தவறு என்றாரவர்.

“தெய்வ உருவச் சிலைகள் வைக்கப்பட்டிருந்த பூஜை மாடங்கள் உடைக்கப்பட்டுள்ளன. அவை கோயிலைச் சார்ந்த பகுதிகள் அல்லவா?”, என்றவர் வினவினார்.