கூ னான்: கோயிலை உடைக்கவில்லை; அழகுபடுத்துகிறோம்

1 adnanகோலாலலும்பூர் மாநகராட்சி மன்றம் ஸ்ரீமுனீஸ்வரர் காளியம்மன் ஆலயத்தை உடைக்கவில்லை; அதை அழகுபடுத்தப் போகிறது என்கிறார் கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் மன்சூர் கூறினார்.

ஜாலான் பி.ரம்லியில் உள்ள அது ஒரு சிறு கோயில் என்று கூறிய அமைச்சர் அங்கு சில சட்டவிரோத நடவடிக்கைகள் நடப்பது அமைச்சுக்குத் தெரிய வந்துள்ளதாக சொன்னார்.

“அண்மையில் குருக்கள் ஒருவரை அனுப்பி வைத்திருந்தோம். அவர் அங்குள்ள குளியலறையில் அவர் மதுபானங்கள் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டார்.

“கோயிலைத் தவறாக பயன்படுத்தக் கூடாது”, என்றவர் குறிப்பிட்டார்.

“அந்த ஆலயத்தை அழகுபடுத்தி அதைச் சுற்றுப்பயணிகளைக் கவரும் இடமாக்க விரும்புகிறேன்”, என்றாரவர்.

அழகுபடுத்தும் பணியை விரைவில் செய்து முடிக்க எண்ணி இருப்பதாகவும் தெங்கு அட்னான் தெரிவித்தார்.