ஆளுநரை நீக்கமுடியாது: கூட்டமைப்பு மீது மகிந்த பாய்ச்சல்

sampanthan_makintha_001வடமாகாண ஆளுநரான ஜீ.ஏ. சந்திரசிறியை மாற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து அவருடன் செயற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முடியுமாகவிருந்தால் ஏன் வடமாகாண ஆளுநரை நீக்கக் கோர வேண்டுமென்றும் ஜனாதிபதி மகிந்த கேள்வி எழுப்பியுள்ளாரென திவய்ன பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, வடமாகாண விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அந்த மாகாண ஆளுநர் மாகாண முதலமைச்சருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்தும் அதற்கு இதுவரை பதிலளிக்கவில்லை என்றும் திவயின தெரிவித்துள்ளது.

TAGS: