பினாங்கு பிகேஆர் பிரதிநிதிகள் மலேசியாகினி கட்டிட நிதிக்கு உதவினர்

pkrபெட்டாலிங் ஜெயாவில் புதிய கட்டிடம் வாங்கும் மலேசியாகினிக்கு உதவும் வகையில்  பினாங்கின் பிகேஆர் பிரதிநிதிகள் மூவர் ஆளுக்கு ஒரு கல் வாங்கி உதவினர்.

ஊடகச்  சுதந்திரத்தை  நிலைநிறுத்தி வரும்  மலேசியாகினிக்கு ஆதரவாக அதன்  ‘ஒரு கல் வாங்குவீர்’ இயக்கத்தில் தாங்களும்  சேர்ந்துகொள்வதாக  அவர்களில் ஒருவரான மாநில ஆட்சிக்குழு  உறுப்பினர் டாக்டர் அபிஃப் பஹார்டின் கூறினார்.

புக்கிட் தெங்கா சட்டமன்ற உறுப்பினர்  ஒங் சின் வென், மாச்சாங் பூபுக் சட்டமன்ற உறுபினர் லீ காய் லூன் ஆகியோர் கல்வாங்கி உதவிய மற்ற இருவருமாவர்.

அவர்களின் நன்கொடையைச்  சேர்த்து கட்டிட நிதி இப்போது ரிம771,900  ஆகியுள்ளது.  60-நாள் இயக்கத்தின்வழி கட்டிட நிதிக்கு  ரிம3 மில்லியன் திரட்ட மலேசியாகினி இலக்குக் கொண்டுள்ளது. ஜனவரி 15-வரை இந்த இயக்கம் தொடரும். விரும்புவோர் ரிம1,000 கொடுத்து ஒரு கல் வாங்கி உதவலாம்.

TAGS: