முதன் முறையாக கஞ்சா விற்க அதிகாரப்பூர்வ அனுமதி

ganja_001அமெரிக்காவில் முதன் முறையாக மாகாணம் ஒன்றில் கஞ்சா விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் முதன் முறையாக கஞ்சா விற்க அதிகாரப்பூர்வமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தலைநகர் டென்வர் உட்பட குறித்த மாகாணம் முழுவதும் ஜனவரி 1ம் திகதி முதல் கஞ்சா விற்பனை தொடங்க உள்ளது.

கஞ்சா செடிகளை வளர்ப்பதற்கு தனி உரிமமும், விற்பனை செய்வதற்கு தனி உரிமமும் வழங்கப்படுகின்றன.

இரு பிரிவுக்கும் சேர்த்து இதுவரை 42 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. 160-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.

மேலும் இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

· 21 வயதுக்கு மேற்பட்டவர்களே கஞ்சாவை விற்பனை செய்ய வேண்டும்.

· ஒரு நபருக்கு ஒரு அவுன்ஸ்(28 கிராம்) அளவுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.

· கஞ்சா வாங்கும் நபர் கண்டிப்பாக தனது அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்.

· வெளி மாகாண நபர்களுக்கு 8 கிராம் அளவுக்கு மட்டுமே விற்க வேண்டும்.

· கடையிலோ, பொது இடத்திலோ கஞ்சாவை புகைக்கக்கூடாது.

· வாகனச் சோதனையின் போது வாகன ஓட்டியின் ரத்தத்தில் 5 நானோகிராமுக்கு மேல் கஞ்சா அளவு இருந்தால் அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கு முன்னதாக கடந்த 2012ம் ஆண்டும் நவம்பர் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் கஞ்சா விற்பனைக்கு, 65 சதவிகித வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்ததாகவும், இதன் அடிப்படையிலேயே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசு ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.