கிறிஸ்துவர்களுக்கு ஆதரவாக பேசும் மரினாவுக்கு பெர்காசா கண்டனம்

cafe1பெர்காசா, முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசாமல் கிறிஸ்துவர்களை  அதரிக்கும் சமூக  ஆர்வலர்  மரினா மகாதிருக்குக் கடும்  கண்டனம் தெரிவித்துள்ளது.

“பொதுமக்களுக்குத்  தெரியும், ஓரினச் சேர்க்கையாளர் போன்றோருக்காகக்  குரல் கொடுப்பவர்களில்  ஒருவர்தான் மரினா மகாதிர் என்பது.

“நேற்று கிள்ளான் தேவாலயத்துக்குக்  கிறிஸ்துவர்களுக்கு ஆதரவு  தெரிவிக்க  வந்த அவரது நோக்கம்தான்  என்ன?

“இன்னொரு  சர்ச்சையை உண்டுபண்ண விரும்புகிறாரா? அல்லது  ஜயிஸைக் கண்டித்து அறிக்கை விடுப்பதன்வழி  மலிவான விளம்பரம்  தேடிக்கொள்ளப் பார்க்கிறாரா?”, என பெர்காசா இளைஞர் தலைவர்  இர்வான் பாஹ்மி  இட்ரிஸ்  ஓர்  அறிக்கையில்  வினவி இருந்தார்.

ஒரு முஸ்லிம்  என்ற முறையிலும்  முன்னாள்  பிரதமர் டாக்டர்  மகாதிர்  முகம்மட்டின் புதல்வி  என்ற முறையிலும்  ‘அல்லாஹ்’ சொல்லைக் கிறிஸ்துவர்கள்  பயன்படுத்தக்கூடாது  எனக் கூறும் முஸ்லிம்  சமூகத்துக்கு  ஆதரவாகத்தான அவர்  செயல்பட  வேண்டும்  என்றவர்  கேட்டுக்கொண்டார்.