மகாதிர்: ஐஎஸ்ஏ திரும்ப வர வேண்டும்

1 dr mமுன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  நாட்டின் நிலைத்தன்மைக்குக் குழிபறிக்கும் “தீவிரவாத  சிறுபான்மைக் கும்பலின்”  செயல்களை ஒடுக்க  உள்நாட்டுப் பாதுகாப்புச்  சட்டத்தை (ஐஎஸ்ஏ) அரசாங்கம் திரும்பக்  கொண்டுவர  வேண்டும்  என  வலியுறுத்தினார்.

முதிர்ச்சியற்ற  அக்கும்பல்  மற்ற  சமயத்தவரை  உணர்ச்சி வசப்பட வைக்கும் வகையில்  பேசி  வருவதுடன்  நாட்டின் இணக்க நிலையையும்  கெடுத்துள்ளது  என்றாரவர்.

“அதுபோன்ற  தீவிரவாத கும்பலுக்கு  ஐஎஸ்ஏ-தான்  சரி”, என்றாரவர்.

ஆர்டிஎம் 2-இல்  ‘ஹல்லோ  ஆன் 2’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர்  செய்தியாளர்களிடம்  பேசிய  மகாதிரிடம்  சிலாங்கூர் இஸ்லாமிய  விவகாரத் துறை (ஜயிஸ்) மலாய், ஈபான்  மொழி  பைபிள்களைப் பறிமுதல்  செய்ததால்  உருவாகியுள்ள  பதற்ற நிலை  பற்றிக்  கருத்து  கேட்கப்பட்டதற்கு  இவ்வாறு  கூறினார்.