பெர்சே 3.0 வழக்கில் அன்வார், அஸ்மின் மீதான குற்றச்சாட்டு தள்ளுபடி

MALAYSIA-POLITICS-VOTE-REFORM-ANWARகோலாலும்பூர்  செஷன்ஸ்  நீதிமன்றம்,  2012 பெர்சே  3.0 பேரணியில் கலந்துகொண்டதற்காக அன்வார் இப்ராகிம்,  அஸ்மின்  அலி,  பட்ருல்  ஹிஷாம்  ஷரின் ஆகியோர்  மீதும் மேலும்  மூவர்மீதும்  சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டை   இன்று  தள்ளுபடி செய்தது.
கடந்த  வாரம் மேல்முறையீட்டு  நிதிமன்றம்,  பேரணிக்குத்  தடைபோட்ட  ஒரு  மெஜிஸ்ட்ரேட்டின்  ஆணை  சட்டவிரோதமானது  என்று  அறிவித்ததை  அடிப்படையாக  வைத்து  குற்றச்சாட்டைத்  தள்ளுபடி  செய்யுமாறு  மனுச் செய்துகொள்ள செஷன்ஸ்  நீதிபதி  அஹ்மட்  பாச்சி அவர்களின் வழக்குரைஞர்களுக்கு  அனுமதி  அளித்தார்.

“அந்த  ஆணையின்  அடிப்படையில்தான்  குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இப்போது  அது  ஆதாரமற்ற  குற்றச்சாட்டாகி விட்டது.

“அதனால், குற்றச்சாட்டைத்  தள்ளுபடி  செய்கிறேன்”, என்று  நீதிபதி  கூறினார்.