கேவியஸுக்கு ரிம200,000 கொடுக்குமாறு என்எஸ்டிக்கு நீதிமன்றம் உத்தரவு

kvsபிபிபி  தலைவர் எம்.கேவியஸை  அவதூறு  செய்த  குற்றத்துக்காக ரிம200,000 இழப்பீடு கொடுக்குமாறு கோலாலும்பூர்  உயர் நீதிமன்றம் த நியு  ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸ்(என்எஸ்டி)  நாளேட்டுக்கு  உத்தரவிட்டது.

வழக்குச்  செலவாக  மேற்கொண்டு  ரிம5,000 கொடுக்குமாறும்  நீதி  ஆணையர்  சித்தி  கத்திஜா எஸ். ஹசான் பட்ஜெனிட்  ஆணையிட்டார்.

அச்செய்தித்தாளில் “கேவியஸ்  கட்சிக் கணக்குச்  சரியில்லையே”  என்ற  தலைப்பில்  வெளியிடப்பட்ட  கட்டுரை  அவரின் பெயரைக்  கெடுப்பதாக  இருந்தது என்பதால்  சித்தி கத்திஜா  அவ்வாறு  ஆணையிட்டார்.