அஸ்மின் நீக்கப்பட்டது ஏன் என்று சிலாங்கூர் எம்பி விளக்க வேண்டும்

azminசிலாங்கூர்  பிகேஆர், அதன்  தலைவர் அஸ்மின் அலி  சிலாங்கூர்  மாநில  மேம்பாட்டு  நிறுவன (பிகேஎன்எஸ்) இயக்குனர்  வாரியத்திலிருந்து  தூக்கப்பட்டது ஏன்  என்பதை  மந்திரி புசார்  அப்துல்  காலிட் விளக்க  வேண்டும்  என விரும்புகிறது.

அரசியல் நியமனங்களைச் செய்யும்போது  கட்சியுடன்  ஆலோசனை கலக்க  வேண்டும்  என்று  கடந்த  ஆண்டு  அக்டோபர்  மாதக் கட்சி  மாநாட்டில்  முடிவு  செய்யப்பட்டிருக்கிறது  என  சிலாங்கூர் பிகேஆர்  செயலாளர்  அமிருடின் ஷாரி  சுட்டிக்காட்டினார். ஆனால், அப்துல்  காலிட்  கட்சியிடம்  அலோசனை  கேட்காமலேயே  முடிவெடுத்துள்ளார்.

“(அம்முடிவு குறித்து)  கட்சித்  தலைமையகத்துக்குத் தெரிவிக்கப்பட்டதா என்பதைத்  தெரிந்துகொள்ள  விரும்புகிறோம்”, என்றவர்  செய்தியாளர்களிடம் கூறினார்.