‘ஒழுக்கம்கெட்ட’ அன்வார் எம்பி ஆவதை எண்ணி மகாதிர் கவலை

dr mதம்  பரம  வைரி  சிலாங்கூர்  மந்திரி  புசார்(எம்பி)  ஆவார்  என்பதை  நினைத்து  கவலை  கொண்டிருக்கிறார்  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்.

அன்வார்  இப்ராகிம்  “ஒழுக்கங்கெட்ட  நடத்தையுடைவர்”  என்பதால்  மக்கள்  பாதுகாப்பாக  இருக்க  முடியாது  என  மகாதிர்  செய்தியாளர்களிடம்  கூறினார்.

“என்னைப்  பொறுத்தவரை,  அன்வார்  எம்பி  ஆவதற்கோ பிரதமர்  ஆவதற்கோ  தகுதியற்றவர். பிரதமர்  ஆவதற்காகத்தான்  அவர்  கட்சியை  உருவாக்கினார்,  இனத்துக்காக,  சமயத்துக்காக  அல்லது  வேறு  எதற்காகவும்  போராடுவதற்காக  அல்ல.

“அந்தக்  காலத்தில்  அவர்  அம்னோவில்  சேர்ந்ததுகூட  பிரதமர்  ஆவதற்காகத்தான்”, என்றாரவர்.

நேற்றிரவு  ஒரு  செராமாவில்  தாம்  எம்பி  ஆவதை  எண்ணி  மகாதிர்  ஏன்  கலக்கமடைகிறார்  என  அன்வார்  வினவியதைக்  குறிப்பிட்ட  மகாதிர், “நாம்  பயப்படுவது  உண்மைதான்……(அவர்  எம்பி  ஆனால்)  மக்கள்  பாதுகாப்பாக  இருக்க  மாட்டார்கள். அவரின்  பணியாளர்கள்கூட  பத்திரமாக  இருக்க  முடியாது”,  என்றார்.