வெளிப்படைத்தன்மையை நிரூபிக்க அனைத்துலக வாரியம்

hishamudinபோக்குவரத்து  அமைச்சு,  மலேசியாவின்  வெளிப்படைத்தன்மையை  நிரூபிக்க  மலேசிய  விமான  நிறுவனத்தின்  எம்எச்370  காணாமல்போனதை  விசாரணை  செய்ய  அனைத்துலக  நிபுணர்  வாரியம்  ஒன்றை  அமைக்குமாறு    அமைச்சரவையிடம்  பரிந்துரைத்துள்ளது.

இன்று  செய்தியாளர்களிடம்  பேசிய  இடைக்காலப்  போக்குவரத்து  அமைச்சர்  ஹிஷாமுடின்  உசேன், விமானம்  காணாமல்போன  விவகாரத்தில்  மலேசியா  எதையும்   மூடி மறைக்க  வேண்டிய  அவசியமில்லை  என்றார்.

“உலக நாடுகளைச்  சேர்ந்த  நிபுணர்கள்  குழு  ஒன்றை  அமைக்கிறோம்……அவர்கள்  நன்கு  மதிக்கப்படுபவர்கள்,  நம்பிக்கைக்குரியவர்கள்.  அவர்கள்,  அச்சமின்றியும், யாருக்கும்  அனுகூலமாக  இல்லாமலும்  விசாரணை  செய்வார்கள்,  முடிவெடுப்பார்கள்”,  என்றாரவர்.