புலம்பெயர்ந்தோர் தொடர்பான இலங்கையின் தடையை இந்தியா ஏற்றுள்ளது – அமெரிக்கா நிராகரிப்பு

indiausaflags16 புலம்பெயர்ந்த அமைப்புகள் மற்றும் 424 தனி நபர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் விதித்திருந்த தடையை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. த டைம்ஸ் ஒப் இந்தியா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இதன்படி இந்த தடை செய்யப்பட்டவர்களில் ஒருவர் பிரித்தானியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்த போது, அவர் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே நடைமுறையை ஈரானும் மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்தியாவும் இலங்கை அரசாங்கத்தின் தடையை தமது நாட்டில் நடைமுறைப்படுத்தி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

எனினும் முன்னதாக கனடா இந்த தடையை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் அமெரிக்காவும் இந்த தடையை ஏற்றுக் கொள்வதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக, இலங்கையில் வெளியாகும் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

TAGS: