ஐஜிபி: இஸ்மா தலைவர் தேசநிந்தனை புரிந்தாரா என விசாரிக்கப்படுகிறது

igpஈக்காத்தான்  முஸ்லிமின்  மலேசியா (இஸ்மா)  தலைவர் அப்துல்லா  ஜேய்க்  அப்துல்லா  ரஹ்மான்மீது  தேசநிந்தனைச்  சட்டத்தின்கீழ்   போலீஸ்  விசாரணை  நடத்தி  வருகிறது.

இதை  மலேசியாகினியிடம்  தெரிவித்த  இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்கார், சினமூட்டும்  வகையில்  பேசுவதைத்  தவிர்க்குமாறு  எல்லாத்  தரப்பினரையும்  கேட்டுக்கொண்டார்.

“இனங்களுக்கிடையில் பதற்றத்தைத்  தூண்டும்  வகையில்  யாரும்  பேச  வேண்டாம்”,  என்றாரவர்.