தமிழகத்தின் அழுத்தம் இன்றி இலங்கை தொடர்பில் இந்தியா தீர்மானம் மேற்கொள்ளும்!- இலங்கை நம்பிக்கை

india-sri-lankaநரேந்திர மோடி தலைமையில் பாரதீய ஜனதா கட்சி பெரும்பான்மை வெற்றியை பெற்றுள்ளதால், அது இலங்கைக்கு நன்மையை ஏற்படுத்தும் என்று அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் ஆதரவு இன்றி இந்தியாவில் ஆட்சி அமைக்க கூடியதாக இருப்பதால், தமிழகத்தின் அழுத்தங்கள் இன்றி இலங்கை தொடர்பில் தற்போது இந்திய மத்திய அரசாங்கம் தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இனி இந்திய மத்திய அரசாங்கம் தமிழகத்தின் அரசாங்கம் குறித்து அக்கறை கொள்ளாது என்றும், இதனால் இலங்கை அரசாங்கத்துக்கு பாதிப்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

TAGS: