இலங்கை தமிழர்களுடன் நேரடி உறவு கூடாது – இந்தியாவுக்கு சுப்ரமணியம் சுவாமி அறிவுறுத்தல்…

Subramaniyaswamyபங்களாதேஸில் உள்ள இந்துக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் உரிமை இந்தியாவுக்கு கிடையாது.

இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுடன் தொடர்பு கொள்கின்ற உரிமை பாகிஸ்தானுக்கு கிடையாது.

அதேபோன்று இலங்கையில் உள்ள தமிழர்களுடன் நேரடிய உறவினை பேணும் உரிமை இந்தியாவுக்கு கிடையாது என்று ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் நடுமை இன்றி இந்திய அரசாங்கம் தமிழ் மக்களுக்காக எந்த ஒரு தீர்வையும் வழங்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுப்ரமணியம் சுவாமி ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: