நஜிப் சாபா சென்ற வேளையில் மாபுள் தீவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்

shootபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  நேற்றிரவு  கோத்தா  கினாபாலுவில்  கால்  பதித்த வேளையில்  செம்பூர்னாவில்  துப்பாக்கிச்  சண்டை  நிகழ்ந்திருக்கிறது.

அச்சம்பவத்தில்  போலீஸ்காரர்  ஒருவர் கொல்லப்பட்டதாகவும்  இன்னொருவர்  கடத்தப்பட்டதாகவும்  சாபா  வட்டாரமொன்று  தெரிவித்தது.

நேற்றிரவு  சுமார்  11.30  மணி  அளவில்,  பிலிப்பினோக்கள்  என்று  நம்பப்படும்  எண்மர் இராணுவ   சீருடையில்  செம்பூர்னாவுக்கு  அப்பால்  உள்ள  மாபுள்  தீவில் தரை  இறங்கியதாகக்  கூறப்படுகிறது.

அது  பற்றி  பொதுமக்கள்  தகவல்  தெரிவிக்கவே  போலீசார் விசாரிக்கச்  சென்றிருக்கிறார்கள்.