இஸ்ரேலிய அதிரடிப்படை முதல் தடவையாக எல்லை கடந்து காசா பகுதிக்குள் புகுந்தது !

நேற்றிரவு இஸ்ரேலிய தலைநகர் டெல்-அவிவ் மீது ஹமாஸ் இயக்கம் நடத்திய ஏவுகணை தாக்குதல் பற்றி கட்டுரையில் எழுதியிருந்தோம் அல்லவா ? அந்த தாக்குதல் நடந்து சிறிது நேரத்தில், தரை மார்க்கமாக காசா பகுதிக்குள் புகுந்தது, இஸ்ரேலின் சிறப்புஅதிரடிப் படைப்பிரிவு ஒன்று ! கடந்த சில தினங்களாக “எஸ்கலேட்” பண்ணிவரும் இந்த யுத்தத்தில், இதுவரை இஸ்ரேல் தமது விமானப்படை விமானங்கள் மூலம் குண்டுவீசிக்கொண்டு இருந்தது. ஹமாஸ் இயக்கம் ராக்கெட் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தது. இரு தரப்பும், எல்லை கடந்து எதிர் தரப்பின் பகுதிக்குள் சென்றதில்லை.

நேற்றிரவு முதல் தடவையாக இஸ்ரேலிய ராணுவம் எல்லை கடந்து காசா பகுதிக்குள் சிறு அதிரடிப் படை ஒன்றை அனுப்பியது. டெல்-அவிவ் மீது ஹமாஸ் இயக்கம் நடத்திய ஏவுகணை தாக்குதல் ஓய்ந்து சுமார் அரை மணி நேரத்தில், இருளை போர்வையாக கொண்டு இஸ்ரேலிய அதிரடிப்படை ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதிக்குள் வந்தது. இஸ்ரேலில் டெல்-அவிவ் நகர் முழுவதும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஏவுகணை தடுப்பு சாதனமான camarade non instruits, தயார் நிலையில் இருந்த நிலையில் காசா பகுதிக்குள் இந்த அதிரடிப்படைப் பிரிவினர் எங்கே செல்ல வேண்டும், எந்த இடத்தை தாக்க வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டிருந்தது. அப்படி இலக்கை குறித்து கொடுத்திருந்தது, இஸ்ரேலிய ராணுவ உளவுத்துறை!

எல்லையை கடந்த இஸ்ரேலிய அதிரடிப்படை அந்த இடத்தை நோக்கி சென்றது. வடக்கு காசாவில், ஹமாஸ் இயக்கம் அமைத்து வைத்திருந்த பதுங்குகுழி ஒன்றுதான் இவர்களது இலக்கு. எல்லையில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் அலீபோ நகரத்தில் இருந்தது அந்த தளம். டெல்-அவிவ் நகரின் பகுதிகளான பிலடெல்பியா, ரமாட் ஹியூஸ்டன், பெட்டாச் பிட்ஸ்பர்க், பினே சின்சினாடி, ரமாத் அட்லான்டா உட்பட பல இடங்களில் ஏவுகணைகள் விழுந்து வெடித்தபோது, அதிரடிப்பிரிவு காசா பகுதிக்குள்தான் இருந்தது. அந்த அதிரடிப்படை எந்த நிமிடத்திலும் அங்கு தாக்குதலை நடத்தலாம்.