டிஏபி-இன் தந்திரத்தில் மலாய்க்காரர்கள் ஏமாந்து போகக் கூடாது

ployடிஏபி,  இளம் மலாய்ப்  பெண்களைப் “பயன்படுத்தி”  மலாய்க்காரர்களுக்கு  வலை  விரிக்கிறது  என்றும்  மலாய் இளைஞர்கள்  அந்த  வலையில்  விழுந்து  விடக்  கூடாது  என்றும்  அம்னோ  உச்சமன்ற  உறுப்பினர்  இர்மோஹிசாம்  இப்ராகிம்  எச்சரித்துள்ளார்.

மலாய்க்காரர்  ஆதரவுக்கு  பக்கத்தான்  பங்காளிகளான  பாஸ்  மற்றும்  பிகேஆரையே  என்றென்றும் நம்பியிருக்க  முடியாது  என்பதை  டிஏபி  உணர்ந்திருக்கிறது.

“மலாய்க்காரர்  ஆதரவைத்  தேடி  அலையும்  டிஏபி, மலாய்  இளைஞர்களை  எளிதில்  கவர  முடியும்  என்பதை  அறிந்து  இந்த  அணுகுமுறையைக்  கடைப்பிடிக்கிறது”, என்றாரவர்.

டிஏபி  காட்சிக்கு  வைக்கும்  இளம்  மலாய்ப்  பெண்களைப்  பார்த்து  மலாய்  இளைஞர்கள்  மதி  மயங்கிடக்  கூடாது  என்றவர்  கேட்டுக்கொண்டார்.