காலிட்: ரோட்சியா நீக்கப்படவில்லை; அவர் என்னை ஆதரிக்கக் கூடும்

khalid1ஆட்சிக்குழுவில்  உள்ள  பிகேஆர்  உறுப்பினர்  ரோட்சியா  இஸ்மாயில்  பதவி நீக்கப்படவில்லை  என்று  சிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிம்  கூறினார். அவர்  ஒரு  வேளை தம்மை  ஆதரிக்கலாம்  என்றும்  அவர்  நம்புகிறார்.

பத்து  தீகா  சட்டமன்ற  உறுப்பினரான ரோட்சியா  இப்போது  வெளிநாட்டில்  இருக்கிறார்.

“அவர்  வரட்டும், அதன்பின்னர்  முடிவு  செய்யப்படும்.

“அவர்  ஒத்துழைக்க  முன்வந்தால் (ஆட்சிக்குழுவில்) இருப்பார்”,  என  காலிட்  தெரிவித்தார்.