பிகேஆர், டிஎபி ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் பதவியில் தொடர்வார்கள்

 

PKR - Halimah சிலாங்கூர் சுயேட்சை மந்திரி புசார் மாநில ஆட்சிக்குழுவிலிருந்து ஆறு பிகேஆர் மற்றும் டிஎபி உறுப்பினர்களை பதவியிலிருந்து அகற்றி இருந்தாலும், மாநிலம் முழுவதிலுமுள்ள பிகேஆர் மற்றும் டிஎபி ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் அவர்களுடைய பதவியில் தொடர்ந்து இருப்பார்கள் என்று சிலாங்கூர் பொருளாதார நடவடிக்கை மன்றம் தீர்மானித்துள்ளது.

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஹலிமா அலி இம்முடிவை செய்தியாளர்களிடம் இன்று கூறினார்.

“ஆம், அனைத்து கவுன்சிலர்களும் தொடர்வார்கள்”, என்றாரவர்.