பொதுத் தேர்தலில் போட்டியிடுவது பிடிக்காமல் பெர்காசா பகாங் தலைவர்கள் விலகல்

perkasaபெர்காசா  தலைமை  அமைப்பு 14வது  பொதுத்  தேர்தலில்  போட்டியிடும்  “சாத்தியக் கூறுகளள்”  ஆராயப்படும்  என்று  கூறியிருப்பதை  அடுத்து  பகாங்  பெர்காசாவின்  தலைவர்கள்  அனைவரும்  ஒட்டுமொத்தமாக  வெளியேறியுள்ளனர்.

அவசரக் கூட்டம்  நடத்தி  19 செயலவை  உறுப்பினர்களும்  பதவி  விலக  முடிவெடுத்தனர்  என  மலாய்  நாளேடான  சினார்  ஹரியான்  கூறிற்று.

பகாங்  மாநில  பெர்காசா  தலைவர்  அப்துல்  வாஹிட்  அப்துல்  மனாப், அந்த  அமைப்பு  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கை  ஆதரிப்பதாகவும், அரசியல்  கட்சியாவதை விரும்பவில்லை  என்றும்  தெரிவித்தார்.