மகாதிர்: நஜிப்பைத் தேர்ந்தெடுத்தது தப்பாக போய்விட்டது

blogபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  மிகுந்த  ஏமாற்றத்தைத்  தந்து  விட்டதாகக்  கூறி  வருத்தப்படும்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  நஜிப்பின்  செயல்பாடு   அப்துல்லா  அஹமட்  படாவியைவிட  மோசமாக    உள்ளது  என்றார்.

மகாதிர்,  இன்று  தம்  வலைப்பதிவில்  நஜிப்பைக்  கடுமையாகச்   சாடி  இருந்தார்.

“வேறுவழியின்றி  ஆதரவு  அளிப்பதை  நிறுத்தினேன். அதுவும்  பலனளிக்கவில்லை. எனவே, இடித்துரைக்கிறேன்”, என்றவர்  கூறினார்.

நஜிப்,  எதிரணியினர், அண்டை  நாட்டவர் ஆகியோரின் விருப்பத்துக்கு  அடிபணிந்து  விடுகிறார்  என  மகாதிர்  குறைப்பட்டுக்  கொண்டார். உள்நாட்டுப்  பாதுகாப்புச்  சட்டம்  மீட்டுக்கொள்ளப்பட்டதை  அதற்கு  ஓர்  எடுத்துக்காட்டாக  அவர்  குறிப்பிட்டார்.

“இடித்துரைக்காத  தலைவர்கள்  நல்லதையே  செய்திருப்பதாக  நினைத்துக்  கொண்டிருப்பார்கள்”, என்றாரவர்.
“இடித்துரைக்கும்போதுதான்  தவறுகளை  உணர்வார்கள். திருத்திக்கொள்ளவும்  முனைவார்கள்”, என்றவர்  சொன்னார்.