நஜிப்பைப் பகிரங்கமாக சாடுவதை நிறுத்துவீர்- தெங்கு அட்னான்

adnanபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  அரசாங்கத்தைப்  பகிரங்கமாக  சாடுவதை  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  நிறுத்திக்கொள்ள  வேண்டும்.

இவ்வாறு கேட்டுக்கொண்ட  அம்னோ  தலைமைச்  செயலாளர்  தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூர், முன்னாள்  பிரதமர்  தம்  கருத்துகளைத்  தனிப்பட்ட  முறையில்  தெரிவிக்கலாம்  என்றார்.

“துன்னின்  கருத்துக்கு  மதிப்பு  கொடுக்கிறோம். அதை  வெளிப்படையாகக்  கூற  வேண்டாம்  என்றுதான்  கேட்டுக்கொள்கிறோம்.

“கட்சி  அல்லது  தலைமைத்துவத்துடன்  பிரச்னை  என்றால்  தலைவரைச்  சந்தியுங்கள். தலைவர்  இல்லையென்றால்  துணைத்  தலைவரிடம்  அல்லது  என்னிடம்  தெரிவிக்கலாம்”, என்றாரவர்.