சீனாவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் : இருவர் பலி; பலர் காயம்

சீனாவின் மேற்கு பகுதியான ஸின்ஷியாங் மாகாணத்தில் லூண்டாய் பகுதியில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களில் இரண்டு பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்ட அமைப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.