மகாதீர்: அரண்மனை முடிவுக்கு தலையாட்டுங்கள்

 

Drm-bow to sultanசிலாங்கூர் மந்திரி புசார் விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து தரப்பினரும் சச்சரவை தவிர்க்கும் பொருட்டு சிலாங்கூர் சுல்தானின் முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மகாதீர் கூறுகிறார்.

சுல்தானின் முடிவை எந்தத் தரப்பாவது எதிர்த்தால், அது நிச்சயமாக நீண்ட கால அரசியல் சச்சரவுக்கு வழிவகுக்கும் என்றார்.

கடந்த வாரம்தான் மகாதீர் தமது பதவி காலத்தில் தாம் ஒரே ஒரு பெயரை மட்டுமே மாநிலங்களின் மந்திரி புசார் பதவிகளுக்கு தாக்கல் செய்ததாகவும் ஆட்சியாளர் அதனை ஏற்றுக் கொண்டனர் என்றும் அவர் கூறியிருந்தார்.