வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்படும் யோசனைகள் அமுல்படுத்தப்பட மாட்டாது: அரசாங்க இணையத்தளம்

northern_provincial_councilநாட்டின் சட்டத்திற்கு முரணாக வடக்கு மாகாண சபையினால் நிறைவேற்றும் எந்த யோசனையாக இருந்தாலும், அதனை செயற்படுத்தாது இருக்கும் உரிமை அரசாங்கத்திற்கு இருப்பதாக அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி அரசாங்க இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டில் அமுலில் இருக்கும் சட்டத்திற்கு முரணான யோசனைகள், வட மாகாண சபையில் நிறைவேற்றப்படுவதாக மாகாணத்தின் அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபை யோசனைகளை நிறைவேற்றினாலும் அதனை அமுல்படுத்த மத்திய அரசாங்கத்தின் அனுமதி அவசியம் எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் தனியார் காணிகளில் நிலை கொண்டுள்ள படையினர் இந்த வருடத்திற்குள் அவற்றில் இருந்து வெளியேற வேண்டும் என வடக்கு மாகாண சபையில் நேற்று யோசனை ஒன்று நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

TAGS: