தமிழ்த்தலைவர்கள் ஜனாதிபதியுடன் பேசவேண்டும்! இந்து இளைஞர் முன்னணி

tna_govtதமிழ்த் தலைவர்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே வடக்கில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழியேற்படும் என்று இந்து இளைஞர் முன்னணி வலியுறுத்தியுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை. அவ்வாறிருக்கையில் தமிழ் தலைவர்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் பின்னிற்பது ஏன் என்றும் அந்த அமைப்பு வினா எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக இந்து இளைஞர் முன்னணி ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையொன்றை லங்காபுவத் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, எதிர்வரும் 12, 13ம் திகதிகளில் ஜனாதிபதி வடக்கு அபிவிருத்திக்கான ஒருங்கிணைப்பு கூட்டத்தை நடத்தவுள்ளார். இதன்போது தமிழ்த்தலைவர்கள் இதனைப் பகிஷ்கரிக்க முயற்சிக்காது , இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதன் ஊடாகவே தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கான வழிபிறக்கும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக லங்கா புவத் செய்தி வெளியிட்டுள்ளது.

TAGS: