வெளிநாடு செல்லும் தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகளுக்கு எச்சரிக்கை விடுத்தது காவல்துறை!

tamilnaduதமிழக அகதி முகாம்களில் உள்ள ஈழ அகதிகள் வெளிநாடுகளுக்கு அரசியல் தஞ்சம் கோரி செல்வது தொடர்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் கடலோர காவற்துறையினர் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கின்றனர்.

அவுஸ்திரேலியா, நியுசிலாந்து போன்ற நாடுகளுக்கு தமிழகத்தில் உள்ள அகதிகள் சட்டவிரோதமான முறையில் படகு மூலம் பயனிக்கின்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்கின்றவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டாம் என்று காவற்துறையினர் அகதிகளிடம் கோரியுள்ளனர்.

இவ்வாறு சட்டவிரோதமாக பயணிப்பதால் பல்வேறு ஆபத்துக்களை சந்திப்பதுடன், உரிய இடத்துக்கு போய் சேர முடியாது என்றும் அவர்கள் எச்சரித்திருக்கின்றனர்.

TAGS: