மூன்று நாட்களில்.. 17 பேரின் தலைத்துண்டிப்பை அரங்கேற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ்

17_beheaded_001சிரியாவில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர், 17 பேரின் தலையைத் துண்டித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், தற்போது குர்து இனமக்கள் வசிக்கும் இடமான கோபேனி (Kobani) நகரை கைப்பற்றுவதில் தீவிரமாய் உள்ளனர்

இந்நிலையில் அந்த அமைப்பினர், கடந்த 3 நாட்களில் மட்டும் 17 சிரியா நாட்டினரை சிலுவையில் அறைந்ததுடன், அவர்களின் தலையைத் துண்டித்து கொடூரமாக படுகொலை செய்துள்ளனர்.

இச்செய்தியை அந்நாட்டின் போர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ரக்கா (Raqqa) நகரில் இருக்கும் மக்களை அச்சுறுத்தும் ஐ.எஸ்.ஐ.எஸ், தங்களது கட்டளைகளை நிறைவேற்றும்படி அவர்களை வலியுறுத்துவதாகவும் கூறப்படுகிறது. -http://world.lankasri.com