பங்: குற்றமற்றவர்கள் தேச நிந்தனைச் சட்டத்தைக் கண்டு பயப்பட வேண்டியதில்லை

bungஎவரும், எதிரணியினர் உள்பட,  தேச  நிந்தனைச்  சட்டத்தை  வைத்துக்கொள்ளும்  அரசாங்கத்தின்  முடிவினால் கலக்கமடைய வேண்டிய  அவசியமே  இல்லை  என்கிறார்   பங்  மொக்தார்  ரடின்.

அச்சட்டம்  எதிர்ப்பை  ஒடுக்கப் பயன்படுத்தப்பட மாட்டாது  எனப்  பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்  அறிவித்த பிறகும்  சிலர்  அதைக்  கண்டு  அஞ்சுவது  ஏன் என்று  கினாபாத்தான்  எம்பி  வினவினார்.

“அச்சட்டத்தைக் கண்டு  ஏன்  கலவைப்பட வேண்டும்,   பயப்பட  வேண்டும்? எதையும்  தூண்டிவிடாதவர்கள் அஞ்ச  வேண்டியதில்லை”.

சமூக ஊடகங்கள் அவதூறுகளையும் சமய  விவகாரங்களையும் தனிமனித விவகாரங்களையும்  பரப்பி  அதன் விளைவாக  நாட்டில்  கலவரங்கள்  மூளுவதைத்  தடுக்க  அச்சட்டம்  அவசியம் என்றவர்  அம்னோ ஆன்லைனில்  கூறியிருந்தார்.