ஓரினச் சேர்க்கையாளருக்கு கல்லடி கொடுத்த ஐ.எஸ்.ஐ.எஸ்! கொடூர சம்பவம்

gay_killed_001ஈராக்கில் ஓரினச் சேர்க்கையாள நபர் ஒருவரை, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தூக்கி வீசி கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர்.

ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்ந்து பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது.

இந்நிலையில் ஈராக்கை சேர்ந்த ஓரினச் சேர்க்கையாள நபர் ஒருவரை சுற்றி வளைத்த ஐ.எஸ்.ஐ.எஸ் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இஸ்லாமிய சட்டத்தின் படி ஓரினச்சேர்க்கை உறவில் இருப்பது தவறு என கூறி கல்லடி கொடுக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார்.

இதனையடுத்து பிரம்மாண்ட கட்டிடம் ஒன்றிற்கு அந்நபரை அழைத்து சென்ற தீவிரவாதிகள், அங்கிருந்து அவரை தூக்கி வீசியுள்ளனர்.

இதன்பின் கீழே வந்து அந்நபரை சூழ்ந்த தீவிரவாதிகள் கல்லால் அடிக்க, துடிதுடித்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதேபோல் இரண்டு ஓரினச்சேர்க்கையாள நபர்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐ.எஸ்.ஐ.எஸ் கொடூரமாய் கொன்றது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com

யாஸிதி பெண்களை அடித்து கற்பழிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்

யாஸிதி இன பெண்களை எவ்வாறு நடத்துகிறோம் என்பது குறித்து, ஐ.எஸ்.ஐ.எஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தொடந்து பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட சுமார் 5,000 யாஸிதிப் பெண்கள் தீவிரவாதிகளால் தினந்தினம் கற்பழிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதற்கு ஆதரவு தெரிவித்து ஐ.எஸ்.ஐ.எஸ்-யில் உள்ள பிரித்தானிய பெண்கள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, தீவிரவாதிகள் தங்களிடம் வரும் பெண்கள் முதலில் கற்பு உள்ளவராய் இருக்க வேண்டும் என நினைக்கின்றனர் என்றும் அப்பெண்களை அடிப்பதோ அவர்களை கற்பழிப்பதோ தவறில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

-http://world.lankasri.com