பெர்காசாமீது நடவடிக்கை எடுக்காத ஜாஹிட்டுக்குக் கண்டனம்

whyபேராக்  டிஏபி  தலைமையகத்தில்  தொங்க  விடப்பட்டிருந்த கிறிஸ்மஸ்,  புத்தாண்டு  வாழ்த்துப்  பதாதையைக்  கிழித்த  பெர்காசா உறுப்பினர்களுக்கு  எதிராக  நடவடிக்கை  எடுக்காமல் உள்துறை  அமைச்சர்  அஹமட்  ஜாஹிட்  ஹமிடி  நொண்டிச்  சாக்கு  சொல்லிக்  கொண்டிருப்பதாகக்  குறைகூறப்பட்டிருக்கிறார்.

தம்  கைகள்  கட்டப்பட்டுக்  கிடப்பதாகவும்  பேராக்  டிஏபி  அல்லது  சம்பந்தப்பட்ட  வேறு  யாராவது  புகார் செய்தால்  மட்டுமே  நடவடிக்கை  எடுக்க  இயலும்  என்று   கூறியதன்வழி  அஹ்மட்  ஜாஹிட்  பெர்காசா  உறுப்பினர்கள்மீது  நடவடிக்கை  எடுக்கத்  தவறி  விட்டார்  என
கேனிங்  சட்டமன்ற  உறுப்பினர்  வொங்  கா வோ  கூறினார்.

“சீருடை  தரிக்காத  போலீசாரும்  சிறப்புப்  படைப்  பிரிவினரும்  அங்கு  இருந்து  நடந்தவற்றைப்  பார்த்துக்  கொண்டுதான்  இருந்தார்கள்”, என வொங்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

போலீஸ்  பல  நேரங்களில்  சொந்தமாகவே  புகார்  செய்து விசாரணைகளை  மேற்கொண்டது  உண்டு  என்றாரவர்.