தாய்மார்களை திசைதிருப்பும் ஐ.எஸ்.ஐ.எஸ்: ஆபத்தின் பிடியில் குழந்தைகள்!

isis_001குழந்தைகளை ஜிகாதிகளாய் மாற்ற இளம் தாய்மார்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் புதிய கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், தொடர்ந்து பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது.

இந்நிலையில் தங்களது இயக்கத்தில் அதிக ஜிகாதிகளை சேர்க்க, இளம் தாய்மார்கள் தங்கள் குழந்தைகள் ஐ.எஸ் இயக்கத்தில் சேருவதற்கு எவ்வாறு ஆர்வம் ஏற்படுத்த வேண்டும்? என வழிமுறைகள் அடங்கிய புதிய கையேடு ஒன்றை ஐ.எஸ்.ஐ.எஸ் வெளியிட்டுள்ளனர்.

அதில் குழந்தைகளை ஜிகாதிகளாய் உருவாக்குவது எப்படி? என்ற பல ஆலோசனைகளை தாய்மார்களுக்கு வழங்கி உள்ளனர்.

இஸ்லாமிய அரசு சகோதரி என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த கையேட்டில் குழந்தைகளை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் மட்டும் போதாது என்றும் அவர்களை தகுந்த பயிற்சியுடன் நல்ல உடல் திறனோடு உருவாக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு 7 வயது ஆகும் வரை காத்திருக்க வேண்டாம். ஏனெனில் அது மிகவும் காலதாமதமாகி விடும் என தீவிரவாதிகள் ஓன்லைன் வழிகாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.

ஜிகாதி கையேட்டில் தாய்மார்களுக்காக கூறப்பட்டு உள்ள சில நடவடிக்கைகள்

* தற்காப்பு கலை பயிற்சி

* நீச்சல்

* வில்வித்தை

* இலக்கை குறிவைத்து சுடுதல் (பொம்மை வெவ்வேறு வகையான ஆயுதங்கள் கொண்டு)

* ஈட்டிகளுடன் குதிரை சவாரி

* காடுகளின் உங்கள் வழியில் செல்லவும் கற்றல்

* உடற்பயிற்சி.(ஓட்டம்,ஜாகிங்,புஷ்-அப்,மேலும் பல)

* கார் ஓட்டும் பயிற்சி (வெவ்வேறு வாகனங்கள் )

* முகாம் அமைத்தல், உயிர்பிழைக்கவைக்கும் முதல் உதவி

இறுதியில் நீங்கள் உங்கள் குழந்தைகளை ஜிகாதிகளாக மாற்ற விரும்பினால் இந்த கையேட்டை இணையதளம் மூலம் பெற்று கொள்ளலாம் என கூறிள்ளனர்.

-http://world.lankasri.com